Posts

Image
படித்ததில் பிடித்தது! "பணம் சம்பாதியுங்கள் - ஆனால் அதை பெறுவதற்கு நீங்கள் எதனை இழக்கிறீர்கள் என்று அவ்வப்போது யோசியுங்கள்.எந்த மனிதனும் பணம் சம்பாதிபதற்காக ஏதோ ஒன்றை இழக்கிறான்.  புத்திசாலி மனிதன் தன்னுடைய உழைப்பு மற்றும் திறமையை கொடுக்கிறான்.முட்டாள் தன்னுடைய வாழ்க்கையை கொடுக்கிறான்." சொன்னவர் - ப்ருஸ் பர்டன் 

படித்ததில் பிடித்தது!

பாதையைத் தேடாதே... உருவாக்கு...

என் அன்பு காதலிக்கு...

உன்னை பார்க்கும் போது உன் தோள்மீது சாய்ந்திருக்க ஆசைப்பட்டேன்... உன் அருகில் நிற்கும் போது உன் கை பிடித்து நடக்க ஆசைப்பட்டேன்... உன்னுடன் நடக்கும் போது பாதையின் தூரம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்... உன் முகம் பார்க்கும் போது காலத்தின் அளவு அதிகரிக்க ஆசைப்பட்டேன்... உன் மடியில் முகம்  புதைத்திருக்கும்  வேளையில்  மண்ணுக்குள் அடங்கிவிட ஆசைபடுகிறேன்... எனக்கு இந்த வரங்களை தருவாயா என் மதிப்பிற்குரிய இதயமே???  

இதுவரை எனக்கில்லை முகவரிகள்!!!

இதுவரை எனக்கில்லை முகவரிகள்!!! அதை நான் கண்டேன் உன் புன்னகையில்! இந்த வரிகளை நான் உன்னிடம் உணர்ந்த வேளையில் உனக்குள் நான் கரைய ஆசைப்பட்டேன்... இன்று முழுவதுமாக உன்னிடம் கரைந்து விட்டேன்... உன்னிடம் நான் எதிர்பார்ப்பது உண்மையான அன்பையும், அதன் மீது கட்டப்பட்ட காதலையும் தான்!!! இடையில் இந்த பொருள் சார்ந்த உலகத்தின் பிடியில் என் சாம்பல் மட்டுமே மிஞ்சுமோ என பயப்படுத்துகிறாய்  நீ???!!! உன்னிடம் உள்ள வேறு எந்த ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை... ஏனெனில் என் நம்பிக்கை அன்பு என்னும் நம்பிக்கை மட்டுமே... ஆனால் வெறும் அன்பு மட்டுமே எல்லாம் கொடுத்து விடாது என்ற நிஜ வாழ்வு உண்மைகளையும் அறிந்தவன் நான்!

யதார்த்தம்!

சில பேருக்கு அவ்வபோது தோன்றும் இந்த கேள்வி! யதார்த்தம் என்றல் என்ன? கண்முன் நடக்கும் சாதாரண விஷயங்கள் எல்லாம் யதார்த்தம் தானோ!! யதார்த்தம் என்பது நிதர்சனம், உண்மை நடப்பு, இப்பொழுது நடக்கும் ஒரு செயல்... உண்மையில் யதார்த்தம் என்பதை நமக்குள் புரிந்து கொண்டிருந்தால் எந்த வித சச்சரவுகளும் கண்டிப்பாக வராது. யதார்த்தவாதிகள் உண்மையை மையம் கொண்டு வாழ்பவர்கள். அவர்களுக்கு எதையும் ஆராய்ந்து பார்த்து செயல் படுவது தொட்டில் பழக்கம். ஆராய்ந்து செயல் படுவது என்றல் நேரத்தை வீணடித்து சிந்திப்பது அல்ல... அது சிந்தனையை சீர் தூக்கி எடுக்கப்படும் ஒரு முடிவு! யாரை எல்லாம் பாதிக்குமோ அவர்களை எண்ணி ஆராய்வது.. ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம். எனக்கு பிடித்த யதார்த்தவாதி நவ-திருப்பதி பகுதிகளில் உள்ள ஒரு சிவன் கோவில் அய்யர். எப்படி என்றால்.. என் நெற்றியில் திருநீறு வைத்துவிடும் போது  என் கண்களில் தூசி விழ கூடாது என்பதற்காக சிவனை ...

நீயே என் சிறகு...!!!

நான் தனியே சுற்றி திரியும் ஒரு பறவை என்னுடைய எல்லா பயணங்களும் ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டுமே இருக்கும் அது என் சிறகுகளை தேடுவது மட்டுமே! நீ என்னுடைய சிறகாக  இருக்கும் வரையில் நான் உயிர் விட்டு பறக்க மாட்டேன்...

நான்காவது பெட்டி!!!

சென்ற வாரம் அலுவலக பணி முடிந்து வழக்கம் போல நான் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிபேட்டை-க்கு பறக்கும் ரயிலில் ஏறினேன். அது மாலை 7 :00 மணி - வெள்ளிக்கிழமை வேறு. பொதுவாக கணினி மற்றும் கணினி சார்ந்த துறைகளில் பணி புரிபவர்கள் அதிகமாக ரயிலில் பயணிக்கும் நேரம் அது. நானும் வழக்கம் போல எஞ்சினில் இருந்து 3 வது பெட்டியில் ஏறிக்கொண்டேன். எனக்கு அடுத்த 4 வது பெட்டி vendor coach என்னும் சரக்குகள் வைக்கும் பெட்டி. வழக்கமாக மிகவும் அதிகமானவர்கள் நின்று செல்லும் பெட்டி அதுவாகத்தான் இருக்கும். இன்று வழக்கத்திற்கு மாறாக அந்த பெட்டியில் ஆட்கள் இல்லை - மன்னிக்கவும் - 2 பேர் மட்டும் இருந்தனர். மீண்டும் மன்னிக்கவும்-3 பேர் இருந்தனர் - 3 ல் 2  பேர் மட்டும் உயிருடன் இருந்தனர். இன்னொருவர் பிணமாக இருந்தார் (அவனா இல்லை அவளா?). மீதமுள்ள இரண்டு பேரும் அந்த பிணத்திற்கு பாடிகார்ட். எங்கேயோ பிறந்து எப்படியோ வளர்ந்து ரயில்வே நடைபாதையில் அநாதை பிணமாக விழுந்து இப்பொழுது அதே ரயிலில் சென்னை சென்ட்ரல்-ல் உள்ள பொது மருத்துவமனைக்கு இருவர் துணையுட...