Posts

அழகும் அவலட்சணமும்

ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்து கொண்டன. நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன சிறிது நேரம் கழித்து குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது. பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது. அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நிஜமான அழகை சந்தித்த  சிலர்,  அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள்.  வேறு சிலர் அழகான  உடை அணிந்த அவலச்சணத்தின்   அழகில்   மயங்கி   கொண்டாடி கொண்டிருகிறார்கள்...

ஆசை

சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளா ல் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான். ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். கதை - 1 உணர்த்தியது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..

ஜென் - சிறுவனும் குருவியும்

சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளா ல் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான். ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். கதை - 1 உணர்த்தியது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..
Image
படித்ததில் பிடித்தது! "பணம் சம்பாதியுங்கள் - ஆனால் அதை பெறுவதற்கு நீங்கள் எதனை இழக்கிறீர்கள் என்று அவ்வப்போது யோசியுங்கள்.எந்த மனிதனும் பணம் சம்பாதிபதற்காக ஏதோ ஒன்றை இழக்கிறான்.  புத்திசாலி மனிதன் தன்னுடைய உழைப்பு மற்றும் திறமையை கொடுக்கிறான்.முட்டாள் தன்னுடைய வாழ்க்கையை கொடுக்கிறான்." சொன்னவர் - ப்ருஸ் பர்டன் 

படித்ததில் பிடித்தது!

பாதையைத் தேடாதே... உருவாக்கு...

என் அன்பு காதலிக்கு...

உன்னை பார்க்கும் போது உன் தோள்மீது சாய்ந்திருக்க ஆசைப்பட்டேன்... உன் அருகில் நிற்கும் போது உன் கை பிடித்து நடக்க ஆசைப்பட்டேன்... உன்னுடன் நடக்கும் போது பாதையின் தூரம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்... உன் முகம் பார்க்கும் போது காலத்தின் அளவு அதிகரிக்க ஆசைப்பட்டேன்... உன் மடியில் முகம்  புதைத்திருக்கும்  வேளையில்  மண்ணுக்குள் அடங்கிவிட ஆசைபடுகிறேன்... எனக்கு இந்த வரங்களை தருவாயா என் மதிப்பிற்குரிய இதயமே???  

இதுவரை எனக்கில்லை முகவரிகள்!!!

இதுவரை எனக்கில்லை முகவரிகள்!!! அதை நான் கண்டேன் உன் புன்னகையில்! இந்த வரிகளை நான் உன்னிடம் உணர்ந்த வேளையில் உனக்குள் நான் கரைய ஆசைப்பட்டேன்... இன்று முழுவதுமாக உன்னிடம் கரைந்து விட்டேன்... உன்னிடம் நான் எதிர்பார்ப்பது உண்மையான அன்பையும், அதன் மீது கட்டப்பட்ட காதலையும் தான்!!! இடையில் இந்த பொருள் சார்ந்த உலகத்தின் பிடியில் என் சாம்பல் மட்டுமே மிஞ்சுமோ என பயப்படுத்துகிறாய்  நீ???!!! உன்னிடம் உள்ள வேறு எந்த ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை... ஏனெனில் என் நம்பிக்கை அன்பு என்னும் நம்பிக்கை மட்டுமே... ஆனால் வெறும் அன்பு மட்டுமே எல்லாம் கொடுத்து விடாது என்ற நிஜ வாழ்வு உண்மைகளையும் அறிந்தவன் நான்!